Saturday 18 February 2012

நல்லிரவு நடுநிசியினிலே
நன்பசியோடு நானிருந்த
நாட்களுமுண்டு...

விளிம்போர திண்ணையிலே
விழிமூடியதுயிலினிலே
வீழ்ந்துகிடந்த நினைவுண்டு...

பிசகியதோர் காலத்தால்
பாடசாலை உறவுகளை
பாராமல் போனதுமுண்டு...

காசில்லா காரணத்தால்
கால்நடை பயணங்களும்
காணமல் போன உறவுகளும் உண்டு...

நண்பர்களை நம்பியதால் பொன்னான
நாட்க்களை இழந்து போன நாட்க்களுமுண்டு...

நானுயர நினைக்கையிலே
நிலைதட்டி வீழ்ந்ததுண்டு...

சின்னவிழி பார்வையிலே
சிக்கிதவித்தகாலமுண்டு...

ஈரவிழிகாதலது
இருபதிலே இருந்ததுண்டு
இதயமதை இழந்ததாலே
இரவுகளை வெறுத்ததுண்டு

அற்பாசை எனக்குள்ளே
அலை அலையாய் பாய்ந்ததுண்டு

சிதறிபோன வாழ்கைதனை
செல்லறிச்ச காரணத்தால்
சொக்க நாதனுன்னை காணுகிறேன்...

நித்தமும் நல்லருள் புரிவாயோ
நள்ளாற்றின் நடனத்தரசே....

மணைவி