Tuesday 21 August 2012


மண்டியிடுகிறேன்...

ஆசான் எனும் அச்சில்
வார்த்த வார்ப்பு நான்...
நான்
எழுதும் எழுத்துக்கள்
எழுத்துப்பலகையில்
பல்பமோடு -என்
கைபிடித்து பழக்கி வடித்த
அச்சுக்கோர்வைகள்
ஆசானின் வியர்வைகள்
தன்னலம் பாராத தியாகிகள்
அறிவுச்சுடரேற்றும் ஞானிகள்
ஆசான்
சேவையின் சிகரங்கள்
என்னை உயர்த்திய ஏணிப்படிகள்
வாழ்வித்த ஜீவன்கள்
மத்தன்களை புத்தன்களாய்
மாற்றும் மகான்கள்
ஆண்டுகள் கடந்தாலும்
ஆசானை நினைக்கையில்
மரியாதை மண்டியிடும்
மனதுக்குள் சலாம் போடும்

பெருமையோடு வியக்கிறேன்
பெரம்படி பட்டதால் தான்
நானும் உங்கள் முன்
என்னை மனிதனாய் மாற்றிய
ஆசான் பிரம்மாக்களுக்கு
என் நெஞ்சுக்குள் பட்டாபிஷேகம்

பரபிரம்ஹ தஷ்மை ஸ்ரீ
குருவே நமஹ....



No comments:

Post a Comment