Wednesday 11 January 2012

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

அரசியல் என்று சொல்லி
உன்னை மடையனாக்குகிறான்
தமிழ் தமிழ் என்று சொல்லி

போதிருமனும் போயாச்சு
குங்பூ வும் சீனா போச்சு
கழனிகாட்டுல சுட்டெரிக்கும் வெயிலுல
மஞ்சளை வெலையவச்ச
அமெரிக்கா உரிமையாக்க
தமிழா இன்னுமா நீ உறங்குகிறாய்..
.
பாலும் தானியமும்
பச்சை காய்கறிகளும்
அன்றாடம் ஜீவிக்க நீ கொடுத்தும்
தமிழா தமிழகத்திலுள்ள
மலையாளத்தான் உபயோகிக்கும்
தண்ணீர் கூட தர மறுக்கிறான்
தமிழா இன்னுமா நீ உறங்குகிறாய்.....

விழி எழு
தமிழனாய் தலை நிமிர்
திருப்பியடி .....

No comments:

Post a Comment