Monday 9 January 2012

அத்தான் என்றழைப்பாள்

அத்தான் என்றழைப்பாள்

அத்தான் என்றழைப்பாள்
அதிகாலை பொழுதினிலும்
கனி இதழ் ரசம் கொடுப்பாள்

புரியாத பாஷையிலே
செல்லமாய் திட்டுவாள்...
கண்கொட்ட விழித்திருப்பாள்
காணாது தவித்திருப்பாள்

நல்லிரவும் தாண்டிடுமே
வெள்ளி நிலா மறைந்திடுமே
மணிகணக்காய் பேசிடுவாள்
மழைபோல சிரித்திடுவாள்

உறக்கத்திலே தவழ்ந்திடுவாள்
உன்மையிலே என் மழலையவள்
கண்ணிமையில் கவிவடிப்பாள்
கவிதையிலே வில்தொடுப்பாள்

என்
காதல் அதை சொல்கையிலே
கொள்ளென நகைத்திருப்பாள்
காலம் வர காத்திருந்தேன்
கடிதம் ஒன்று தந்துவிட்டாள்

அரவம் ஒடுங்கிய தருணத்தில்
அடுக்கடுக்காய் கணைதொடுத்தாள்
அவள் இதயத்தில் இடம் கொடுக்க

இடைவெளி இல்லாத
இனிமையான இடம் கேட்டேன்
சம்மதம் தந்தவள்
அன்றே என்னை
அத்தான் என்று அழைத்துவிட்டாள்.

No comments:

Post a Comment