Thursday 1 November 2012

உணர்வாய்...




நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல
இது
வேதாந்தம் அல்ல
விவேகம் உள்ளது- உண்மையை
அறியும்...

உயிர்கொடுத்தது
இருந்ததை எடுத்து
இறந்து போனது
முன்பே இருந்தது

உயிரோடு இருப்பது...
இருந்ததாய் இருந்தது
வட்டத்திற்கு ஏது
தொடக்கம்...!!

விரலால் தடவிப்பார்
ஆரம்பம் தெரிகிறதா என்று...!!!
பிராய்ச்சித்தம் செய்
வட்டத்தை விட்டு
வெளியே வா... எப்படியாவது!!

நான்...நீ...அவன்
வேறு வேறு அல்ல.

என்றும் அன்புடன்
                                                    கலைச்செல்வன்

No comments:

Post a Comment