தாகமாய்
வாய் திரந்து
காத்துகிடக்கும்
சிப்பிகள் போல்...
வேதனையாய்
நான்கிடந்தேன்
கடற்கரை
மணரற்பரப்பில்...
நண்டுகள்
மெதுவாய் உரசி
ஓடின...
குழிதோண்டி
கண்ணாமூச்சி
விளையாடிக்காட்டின...
சப்தமாய் சிரித்து
அலைகள் கோபமூட்டின...
யார் அழுக்கையோ
துவைத்து தள்ளிய
சோப்புநுரைகளை
என்மேல்
வாரிதெளித்தன...
காற்று
மணலால் அடித்து
முகமெல்லாம்
பொத்துபோயின...
கடலே...நீ...
சேமித்த கண்ணீர்
போதும்
என்கிறாயா?
நீயும் என்னை
துரத்தி தள்ளினால்
எங்கேபோவேன்?
யாரிடம் கேட்பேன்
யாராவது
முகவரிதெரிந்தால்
சொல்லுங்களேன்
தேடிப்போகிறேன்...
நிம்மதி தேடி...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment