Friday 2 November 2012

எங்கே...



உனக்கு நீயே
தெரியாது போனால்
தோற்றுப்போவாய்

உன்பெயர் மட்டும்
தெரிந்தால் போதுமா?
பூர்விகம் அறிய
வேண்டாமா?

ஒருவரால் கூடாது
இருவர் கூடி
ஆணுக்குள்
உயிரை வைத்து
பெண்ணுக்குள்
உருவம்

ஊதிய காற்றில்
எல்லாம்
அசைந்தது
உருவம் வெளியே
வந்து விழுந்தது

கதவுகள் தானாய்
மூடிக்கொண்டது
வந்து விழுந்ததும்
கதறி அழுதது... இனி
மீண்டும் போவது எப்படிஎன்று...

எல்லாம் பார்க்கிறான்
ஊதியவன்
ஓரமாய்
நின்று.
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.

No comments:

Post a Comment