பணிநீர் ஆடி
தென்றல் துடைத்து
சூரிய ஒளியில்
பூக்கள் திருவிழா...
சீட்டி அடித்து
வண்டுகள் வருகை
வட்டம் போட்டு
வாசம் நுகர்ந்து
திறந்த குப்பியில்
மகரந்த பருகை...
வந்து அமர்ந்தன
பட்டாம் பூச்சிகள்...
காதில்கேட்டன...
இரகசியம் என்ன ! பூவே
வண்டுகள்
சொன்னதன்
இரகசியம் என்ன ??
சொல்லி
அழுதன பாவம்
மலர்கள்...
உன்னை
உறிஞ்சி
தேன் எடுத்தேன்
பூவே...
காதலால்
அல்ல...
வண்டு என் ஜாதி
முரடன்
என்பது – உனக்குத்
தெரியாது போனால்
பொறுப்பு நானால்ல...
காற்றடிக்கும் – மீண்டும்
நிமிர்ந்துகொள்!
என்று
இப்படிச்சொல்லி
அழுதன
பாவம் மலர்கள்
தடவிக் கொடுத்தன...
பட்டாம் பூச்சிகள்
பாவம் மலர்கள்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.
No comments:
Post a Comment