Tuesday 20 March 2012

எட்டுத்திக்கும் புகழ் மணக்க

எட்டுத்திக்கும் புகழ் மணக்க
இருந்த பெருந்தமிழணங்கே
உன் பிள்ளைகளை
சிங்கள ஓநாய்கள்
சிதைத்தபோது
எங்கிருந்தாய்
மொழிகாத்தால் போதுமென்று
இருந்து விட்டாயா

உன் குடிகாக்க உனக்கு யாரும்
கற்றுத்தரவில்லையா
பிடிமண்ணும் வேண்டாமென்று
பேதலித்து நடந்து வந்த
எம் தமிழ்க்குடியையும்
பேடியவன் காலாட்படையோவென்று
கணநேரம் கலங்கி கொன்று விட்டானோ
நீ கரம்கொடுத்து சிரம் காப்பாயென்று
விதிநம்பிய மதி நம்பி
தமிழே கதிஎன்று வந்தோரை
நீயும் ஏன் கைவிட்டாய்

எம்
தமிழ்த்தாலிகளை காப்பாற்ற
இத்தாலியிடம்
கை ஏந்த வைத்து
எந்தத்திக்கு சென்றாய், நீ
எமையேன் இங்கு புலம்பவிட்டாய்

நன்றி திரு.தேவதாஸ்.

No comments:

Post a Comment