எட்டுத்திக்கும் புகழ் மணக்க
இருந்த பெருந்தமிழணங்கே
உன் பிள்ளைகளை
சிங்கள ஓநாய்கள்
சிதைத்தபோது
எங்கிருந்தாய்
மொழிகாத்தால் போதுமென்று
இருந்து விட்டாயா
உன் குடிகாக்க உனக்கு யாரும்
கற்றுத்தரவில்லையா
பிடிமண்ணும் வேண்டாமென்று
பேதலித்து நடந்து வந்த
எம் தமிழ்க்குடியையும்
பேடியவன் காலாட்படையோவென்று
கணநேரம் கலங்கி கொன்று விட்டானோ
நீ கரம்கொடுத்து சிரம் காப்பாயென்று
விதிநம்பிய மதி நம்பி
தமிழே கதிஎன்று வந்தோரை
நீயும் ஏன் கைவிட்டாய்
எம்
தமிழ்த்தாலிகளை காப்பாற்ற
இத்தாலியிடம்
கை ஏந்த வைத்து
எந்தத்திக்கு சென்றாய், நீ
எமையேன் இங்கு புலம்பவிட்டாய்
நன்றி திரு.தேவதாஸ்.
No comments:
Post a Comment