Friday 30 March 2012

தினமும் ஒரு பாடல்

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழியை அனைத்து
இந்திய மக்களுக்கும் நன்கு விளங்க வைத்தது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல்
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களி்ன் ஆதிக்கம். அவர்கள் நம் நாட்டின் மேல்
ஆதிக்கம் செலுத்த ஏதுவாயிருந்தது கி.பி. 1608 ஆண்டில் அவர்கள் நம்
நாட்டினுள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனி
எனும் பெயரில் உள்ளே நுழைந்த காலத்தில் நம் நாடு பல்வேறு சிறு
தேசங்களாகப் பிரிந்திருந்து அவற்றை ஆண்ட மன்னர்கள், சிற்றறரச்கள்
முதலானோ்ர் ஒருவரோடொருவர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காகப் போரிட்டு
வந்த நிலைமையேயாகும்.
நம் நாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்க
எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும்
தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடி, வெற்றி கண்டு
நாமெல்லோரும் சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தித் தந்தனர்.
அவ்வாறு அவர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் 50
ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே முற்றிலும் இழந்து விட்டோம். இன்று
நம் நாட்டில் அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டமடைந்த நிலையில் அந்நிய
நாட்டவர் மூலதனத்தில் தொழிற்சாலைகள் நடப்பதும், அவற்றில் நம் நாட்டவர்கள்
ஊதியத்துக்காகப் பணி செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.
இத்தகைய இழிநிலையடையக் காரணம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை
உருவானதுவே ஆகும். இதற்கு சாதிமத பேதமும் தனி மனித ஒழுக்கக் குறைவுமே
முக்கியக் காரணங்கள். "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல்
என்ன நீதி?" என்ற பாரதியின் பாட்டு இக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.
சாதிமத பேதத்தைத் துறந்து ஒற்றுமையாய் வாழ்ந்து நாட்டை உயர்த்தப்
பாடுபடுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

No comments:

Post a Comment