Friday 30 March 2012

தினமும் ஒரு பாடல்

இவ்வுலகே ஒரு அதிசயம். நாம் வாழ்வதும், நம் கண் முன்னர் பல விதமான
எண்ணிலடங்கா உயிரினங்கள் வேறுபட்ட தோற்றத்துடனும் குண நலன்களுடனும்
வாழ்வதும் அதிசயம். சூரியனும் சந்திரனும் அந்தரத்தில் நமது கண்களுக்கும்
கருத்துக்கும் புலப்பாடாத பாதைகளில் தினந்தோறும் பவனி வருவதும்,
வானமெங்கும் தோரணங்கள் கட்டியது போலப் பல கோடி நட்சத்திரங்கள் விதவிதமான
அமைப்பிலான குழுக்களாய் விளங்கி ஒளிர்வதும், பல விதமான பயிர்களும் செடி
கொடிகளும் பழங்களுடனும் காய்களுடனும் திகழ்வதும் இவை யாவும் நாம்
என்றென்றும் கண்டுணர்ந்து களிக்கத்தக்க அதிசயங்களன்றோ?
இவ்வாறு இருக்கையில் நமது புலன்களின் உணர்ச்சிக் குறைபாடுகளை தமக்கு
சாதகமாக்கிக் கொண்டு மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் மாயாவிகள்
செய்யும் கண்கட்டு வித்தைகளை அதிசயமென நம்பி ஏமாறுவது மனிதனின்
அறியாமையைக் காட்டுகிறது. உலகெங்கும் இயற்கையாகவே இலவசமாகக் கிடைக்கும்
இன்பம் தரும் பலவிதமான வளங்களையும், அன்பைப் பொழியும் உயிர்க்
குலத்தையும் உணராமல் பகட்டான வாழ்வுக்காக ஏங்கிப் பணம் தேடுவதொன்றே
குறிக்கோளாக வாழ்வது மடமையே.
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்
- பாரதியார்

படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல். : வைரமுத்து
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

No comments:

Post a Comment