Thursday 29 March 2012

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.

வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம் நடத்தி கவிக்கோ இதைப் படிக்க வேண்டும்.

*******

அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன;
'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன;
நாம்
பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுகொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்'கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? சீதையா ?" என்று
பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்துகொண்டிருக்கிறார்கள்;

நாம்
இருட்டுக் காடுகளுக்கு
வேர்வை வார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வியப்பேதும் இல்லை.

அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்.

இதோ !
தேவ வேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன.

இதோ !
ரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.

இதோ !
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ !
வெள்ளக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கிறது.

இன்று
அசோகச் சக்கரதின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்பெருகிக்கொண்டிருக்கிறது.

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment