Friday 30 March 2012

தினமும் ஒரு பாடல்

இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப்
பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும்.
விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,
"இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு"
எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.
காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில்
சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும். இவ்வாறிருக்க சில காலமாக
விவசாய நிலங்கள் முறைகேடான விதத்தில் ஆக்கிரமிக்கப் பட்டு சட்ட
விரோதமாகப் பல கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் என
மாற்றப்பட்டு வருவது மிகவும் வருந்தத் தக்கது. இதனால் நாட்டில் உணவுப்
பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாவதுடன் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர்ப்
பஞ்சமும் தலை விரித்தாடும் அபாயமும் உருவாகி வருகிறது.
மேலும் ஆற்று நீர் குறித்த காலத்தில் விவசய நிலங்களுக்குக் கிடைக்காமை,
வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்கள், வியாபாரிகளின் சந்தை ஆக்கிரமிப்பு
மற்றும் அரசியல் சூழ்நிலை உட்பட்ட பல காரணங்களால் விவசாயிகள் பலர் தமது
கைப்பொருளெல்லாம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் நமது
நாட்டில் சமீப காலத்தில் உருவானது மிகவும் வேதனை தருகிறது.
இத்தகைய விபரீதங்கள் மேலும் தொடராமல் தடுக்கப் பாடுபடுவது இந்திய மக்கள்
ஒவ்வொருவரது கடமையாகும். முறைகேடுகள் நிகழாவண்ணம் தடுக்க ஏற்ற
வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துதல் அவசியம். இல்லையெனில் இந்த உலகில்
மனித இனம் வாழ முடியாத நிலை விரைவில் உருவாகக் கூடும்.

திரைப்படம்: பழனி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.
ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1965
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

No comments:

Post a Comment