Thursday 29 March 2012

ஈ(ர)ழத்துளிகள்

ஈ(ர)ழத்துளிகள்

பதுங்கியிரு இப்பதுகுழியில்

அப்பா வந்தாலும் வருவேன்

________________________________________

கணக்குப் பாடம்

ஒன்று

இரண்டு

மூனு

நாலு

அம்மா மொத்தம் நாலு குண்டுகள்

உன் மீது?

________________________________________

மழை வேண்டாமென வேண்டும்

விசித்திர மனிதர்கள் நாங்கள்..

குண்டுமழை வேண்டாமென வேண்டும்

மனிதர்கள் நாங்கள்.

சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது

நாங்கள் மனிதர்கள் தானா?

________________________________________

அப்பா எனக்கு

பேய் பூதம் பிசாசு என

வரைந்தேதும் காட்டியதில்லை

நேரில் நிறைய பார்த்ததுண்டு

________________________________________

இயலாமையின் உச்சத்தில்

வழிவதெல்லாம் மெளனம் தான்

அழுவதற்கும் சக்தியெல்லாம்

என்றோ போய்விட்டது

________________________________________

ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு

சிகப்பு என்கின்றான்.

என்னிடம் இனி கேள்வியில்லை.

No comments:

Post a Comment