Wednesday 31 October 2012

ஊருக்கு...



நீ
நடக்கிற
பாதைகளில்
கிடக்கிற கற்களெல்லாம்
தடைகள் என்றால்
ஊர்போய்
சேர்வாயோ?...

உன் வழி நெடுக
சிதறிய மணமெல்லாம்
நீ
நடந்து பொடித்துபோட்ட
கற்கள்தானே...

போகிறைட்த்தை
மனதில் நிறுத்து
பாதையில் துணைக்கு
படைத்தவனை
கூப்பிடு...

வந்ததின்நோக்கம்
சரியாய் செய்ய
போகிஇடம்
தானாய்புரியும்...

தரித்திரியம் எல்லாம்
தேடி தொடை
திருடனை
தேடிபிடித்து
தேரிழுக்க பழக்கு...

தர்மம்செய்ய
சத்திரம் கட்டு
தேசம் முழுதும்
அன்புகொடி நாட்டு...
தேவையுள்ளவனுக்கு
கூப்பிட்டு கொடு...

தேகம் இறுத்தி
சமாதிசெய்து
புத்தியைசெலுத்து
தானாய் நீயும்
ஊர்வந்து சேர்வாய்...

விருந்து வைத்து
காத்துகிடக்கிறான்
படைத்தவன்
உனக்காய்
வந்த்தின் நோக்கம்
சரியாய் செய்தால்...



என்றும் அன்புடன்
கலைச்செல்வன்


No comments:

Post a Comment