Thursday 3 May 2012

வேடிக்கை

உயிர் அற்று கிடக்கும் தேகம்
கூடி அழும் கூட்டம்...
தலைவிரித்து மனைவி 
ஒப்பாரி
கதறி அழும் பிள்ளைகள்....

காரணமெல்லாம்
அவனைவிட்டு காற்று போனது
அவன் அதுவாயிற்று...
எதற்காக இந்த அழுகையெல்லாம்...

உடையவன் மரித்தான்
மஞ்சம் போனது
வருகிற காலம் காசுகள் வேண்டும்
என்ன செய்வது?
மனைவியின் அழுகை....

தகப்பன் மரித்தான் - இனி
என் தலை உருளும்
குடும்பம் எனக்கு பாரமாய் போகும்
என்ன செய்வது?
பிள்ளையின் அழுகை....

கிடக்கிற பீடை கொடுக்காமல் போனதே
கடன் கொடுத்தவன் கதறி அழுகை

இப்படி அனைத்தும் தனக்காய்
அழுதால்...
கிடப்பன் எதற்கு??

எடுத்து போ... எரித்து போடு...
அழுகை நாடகம் சில மணி நேரம்

மீண்டும் நாளை 
புதியது தொடங்கும்

எல்லாம் நாடகம்.....

No comments:

Post a Comment