Sunday 6 May 2012



அனாதைகள்...
உள்ளுக்குள்ளேயே அழுகிறேன்
யாருக்கு தெரிந்துதான் என்ன?
உதவுகிற கரங்கள் வெளியே இல்லையே...

உள்ளே இருப்பவன் மூழ்கி
மூச்சுமுட்டி வெளியே வரட்டும்-ஆகையால்
நான் நெஞ்சுக்குள்ளேயே அழுகிறேன்!

கடல் கடந்து அந்நியனானேன்
நினைவுகளை நெஞ்சுக்குழியில்
தேக்கி வைத்து தாகம் தீர்த்துக்கொள்கிறேன்...

சகாராக்களின் ஒட்டகங்களைப்போல்
பாரங்களை சுமந்து பள்ளமான முதுகள்...

மனைவி பிள்ளைகள்எங்களுக்கு
தூரத்துவானம்
உறவுகளோடு பேசுவதில்கூட
காலவரையரை...

காசுகள் எல்லாம் கடனுக்கு மட்டும்
எரிகிற நெருப்பில் நடக்கிறாய் பிணங்களாய்
படுக்கையில் கிடந்தால்
நரக வேதனை...

உள்ளுக்குள் அழுதேன்
சொந்ததேசம் அந்நியமாயின...

நம்தாய் தேசம் விரட்டியடித்தது
அந்நிய மண்ணில் எரிந்தது எம்மை
வேலை இல்லை என்று...

வேசியைப்போல் வேண்டாவிருப்பமாய்
அந்நிய மண்ணில் அநாதைகள்
நாங்கள்...
அழுகிறேன் நெஞ்சுக்குள்ளே...!

No comments:

Post a Comment