உன்னோடு...
என் நெஞ்சுக்குள் உயிராய் நீ இருந்தாய்
நிதமும் உன் முகம் பார்த்திருந்தேன்
விரிந்த என் மார்பில் நடக்கவிட்டு
உன்
வளைந்த இடையை நேராக்க
தடவி தடவி தவமிருந்தேன்
உன்
பருத்தகொம்பை அழகினிலே
மதுவை உண்டதாய் நான் கிடந்தேன்
நீடிய தடித்த கழுத்ததனை
விரலால் தொட்டு வாசித்தேன்
விரகம் எல்லாம் ஆரம்பமாய்
ஆ! எனபிளந்த உன் உதடுகளில்
மகரந்தம் பருக என் இதழ் பதித்தேன்
விடிந்த உன் கூந்தலில்
என் கைப்போட்டு இருக்கமாய்
உன்னை இழுத்துக்கொண்டேன்
இமயம் உடைந்து வழிந்தது போல்
உள்ளுக்குள்ளே நான் உணர்ந்தேன்
உன்
தலையனை மார்பில் முகம் புதைத்து
பிரண்டு பிரண்டு நான் படுக்க
எத்தனை ஆசை உன்னோடு
இரவுகள் முழுதும் கணாகண்டேன்...
No comments:
Post a Comment