Monday 7 May 2012


கல்லரை வரை சில்லரை....

பூசாரியும் காலணா கிடச்சாதான்
கடவுளுக்கு கால்பிடிப்பான்
கட்டியவளும் காசு இல்லேனா
கட்டில் காட்டமாட்டாள்...

கஞ்சிகளையம் கவுத்து வச்சி
காலு மேல கால போட்டு
காரசாரமா கபடி ஆடுவா...
பெத்தபிள்ளை விசலடிப்பான்
வில்லன்மாறி...

பேடித்து வீட்டுக்குள்ள விறகு இருந்தா
அப்பன்காரன் மாற்றி வைப்பான்..
மூனு வேளை சோறுபோட
ஒரு நாள் மறந்தாலும் கட்டியவ
மாரியத்தா ஆயிடுவா...

பெத்ததெல்லாம் சுத்தி நின்னு
கத்தியே குத்திப்போடும்...
அடடா பணமிருந்தா பாசம்வரும்
சொந்தமே சொத்திருந்தா தான்
சோறு போடும்
உறவே இப்படினா!
ஊர் எப்படிங்க...

வெள்ள வேட்டி இல்லைனா...
ஊர்காரன் ஆளுவச்சி வேவுபார்ப்பான்...
வெறும்பய ஆகிப்போனா
குடும்பத்தையே கூவமாக்கி
ஊர்மொத்தம் திறந்து வைப்பான்...

உதவிக்குன்னு போயிநின்னா
வேசியாக்கி விலைகேட்பான்
பணம் இருந்தா வேட்டிகட்டு...
மானம் போகாது!

மரித்ததும் உன்னை
மண்ணுக்குள் தள்ள
வெட்டியானுக்கும் தள்ளனும்...
புரியுதா??

No comments:

Post a Comment