Monday 28 May 2012


வலியது...வலி இது...

நீ தந்த ஜீவனிலே
நானின்று வாழுகின்றேன்
தனிமையிலே வாடுகின்றேன்

நீ இல்லா நாட்களிலே
நண்பனெ யாருமின்றி
கந்தல் ஆடை உடைஉடுத்து
கையில் ஏதும் இல்லாமல்
வீதிகள் தோறும் விரைந்து சென்றேன்
என் நண்பா....

கடந்து முடிந்த காலத்தை
யாதென அறிந்து கொள்ள
ஆசையேதும் எனக்கில்லை

எனினும் என்பால் ஓராசை- உள்
எழுகிறது உன்பால் உறவாட
எனை நீ உன்வசம் எடுத்துக்கொள்
இடைவெளி நம்மை பிரிக்காமல்

நின் அன்பை பெறுவதற்காக
அறிவை இழந்த பைத்தியமாய்
என் செயல் ஒழிந்து பலமுறை
இருளில் சிக்கிகொண்டேன் நான்

எனதான்மாவின் தோழன் நீ
உனை பலமுறை பார்க்கிறேன் – ஆம்
உன்னுள் என்னை தேடுகிறேன்...

உயர்ந்த அன்பை உன்மையுடன்
உள்ளத்தில் நேசித்திருப்பவனே
இரந்து வாழும் என்னிடம்
இன்பம் என்று வருவதன்றோ...?


          


No comments:

Post a Comment