வறண்ட
வாய்க்காலில்
நீர் பாய்ச்சுகிறேன்...
வாசமுள்ள
மலர்களால் தோரணம்
கட்டி
பூமியின்
ஆயுசுக்காலங்களை
கூட்டிப்பார்க்கிறேன்...
பட்ட மரங்களில்
ஊஞ்சல் கட்டி
கத்தி படாமல்
பாதுகாக்கிறேன்...
வெட்டிய வாழையை
விருந்துக்கு அழைத்து
வரவேற்க வாசலில்
இருத்தி வைக்கிறேன்....
கற்றவை
எல்லாம்
ஒன்றாய் கூட்டி
தர்மம் செய்வதை
கற்று கொடுக்க
நீங்களும்
எங்கள் வரிசையில்
வந்தால்
எத்தனை நன்மை
யாவருக்கும் உலகில் .......
No comments:
Post a Comment