Wednesday 19 October 2011

எனது நன்பர் கவிஞர் காவிரிமைந்தனுக்கு...

காகையும்
நீயும்
சொந்தக்காரர்கள்...

கூடிவாழ்வதில்,
கொடுத்து வாழ்வதில்,
காத்துவாழ்வதில்...

வேறொன்றும் இல்லை தவறாக....

நீ
வற்றாத காவிரி
உன்
உதிரத்தில் வளர்ந்தது
தமிழ்...
வானொலியால்...
வானலையில்...

அமீரகத்தில்
தேர் இழுத்தாய்...
வளர் தமிழ்
வளர்பிறையாய்...

இனி
பாலைவனத்தில்.....

காவிரி....?????

வரண்டுபோகுமா?
வந்துபோகுமா?

மாதம் ஒருமுரையாவது
கராமாவில்
கரைபுரண்டு ஓடும் ...

கவிதையும்...
கண்ணதாசனுமாய்...

தமிழும் தேருமாய்

கர்நாடகத்தில்
கமண்டலத்தை
காக்கை கவிழ்த்ததால்
காவிரி.
..
கவிஞர்
கண்ணதாசன்
பேனா காகிதத்தில்
கவிழ நீ...

காக்கையும்
நீயும்
உறவுக்காரர்கள்
உன்மைதானே....

ஈரம்
நீ வளர்த்த இந்த மரத்தில்
நீ வார்த்த நீரில்

ஈர மண்ணின் நேசத்துடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment