Tuesday 30 October 2012

மறுமணம்...



கரும்பலகை அல்ல
என் இதயம்
எழுதியதை அழித்துவிட்டு
புதியது எழுத...

குருதியில் கலந்து
இரத்தநாளங்களில்
சீராய் ஓடும்
என்னவனின்
இரகசிய நினைவுகள்

சுகங்களை பறிமாறி
சரியாய் பகிர்ந்து
எனக்கு அவனும்
அவனுக்கு நானும்
விருந்துண்டு களித்தோமே...!

எனக்குள் குணிந்து
என் தேகம் பார்க்கையில்
என்னவன் ஸ்பரிசித்த
அவன் விரல்களில்
நடந்துபோவது
இப்போதும் தெரிகிறது...

என் கூந்தலை நுகர்ந்து
அவன்
நாசியின் நுனி – என்
தேகத்தில் ஓடிப்பதித்த
பதிவுகள்
இன்னும் மாறலயே...

ஆழமாய்
முத்தித்து பதித்த
அவன்
அதரங்களின் அடையாளம்
இன்னும்
கிடக்கிறது...

அழுத்திபிடித்து
நெருங்கிய
அவன் கரங்களின்
அழுத்தம் இன்னும்
அழகாய் – என்
இதயம் நினைக்கிறது...

சமூகமே!
பூவையும் பொட்டையும்
பறித்துக்கொண்டு
வெள்ளைபுடைவை
உடுத்திப்பார்...
பரிகசி- பரவாயில்லை

ஆயின்
எனக்குள் எனக்காய்
நான்
எழுதிய நினைவுகளை
கலைக்க முயற்சித்து
தோற்றுபோகாதே!!

மணம் பேச
வாருங்கள்
மாண்ட என்கணவன்
மறுபடி வந்தால்
மட்டும்...

கரும்பலகை
அல்ல
என் இதயம்-எழுதியதை
அழித்துவிட்டு
புதியது எழுத...

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்.



No comments:

Post a Comment