கனவுகள் காண்பது சுகம்
நிஜங்களை சந்திக்கும் போது...???
மேலே உள்ள
பொய்யானதெல்லாம்
மனதுக்கு தருவது ரணம்
எல்லாம் பொய்...
நிஜம் எது?
நிஜம் எதெல்லாம்
கஷ்ட்டத்தை தருகிறதோ அது...
எதெல்லாம் உன்னைவிட்டு
விலகி போகிறதோ அது...
எதெல்லாம் உதட்டால் சிரித்து
கையை அகல விரிக்கிறதோ
அது...
எங்கெல்லாம்
வறுமை இருகிறதோ அது...
இவையெல்லாம்
இதய்மிருந்தால்
காண்பது மனம்
நிஜம்...
சுகமானது
பாரங்களை சுமப்பது.
காயங்களுக்கு மருந்திட்டு
வேதனையை குறைப்பது
எப்படியோ
அப்படிதான் நேசிப்பதும்...
அன்புசெய்தல்
முகம் தெரியாதவனுக்காய்
முதுகில் அடிபடுவது
பசியாய் இருப்பவனுக்கு
ஒருவாய் உணவு...
உடுக்காதிருப்பவனுக்கு
உடுத்திப்பார்ப்பது...
வியாதியாய் இருப்பவனை
விசாரிப்பது...
விபச்சாரமில்லாத
வாழ்வில் உடையவளோடு
உறவு காண்பது...
ஆஹா ...!ஆஹா...!!!
எத்தனை சுகம்
வாசிக்கும் போதே
எத்துனை அழகு
எழுதும் போது
இதுதான் நிஜம்...
நிஜம்
நேசித்துப்பார்
நீயும் உணர்வாய்
கடவுளை தேட -
இப்படித்தான் காண்பாய்
வேறு வழியே இல்லை
கடவுளை தேடி ஓடி
இளைத்துப்போகாதே...
நிஜத்தை நோக்கி ஓடு
விலகிப்போ...
பொய்யை விட்டு
தூரமாய்...
இடைவெளி விடாமல்
அன்புசெய்
இறுகப்பிடித்துக்கொள்
நீயும் கடவுளாவாய்
சக்தி பெருகும்
மனம் பெலப்படும்...
நீ
செய்வதெல்லாம்
வாய்க்கும்...
நீ
அன்பு செய்
உன்னை நீ தான்
வெற்றி கொள்ள வேண்டும்.
அன்பு செய்வோம்
ஆணந்தம் கொள்வோம்
எல்லோரும் நமதாய்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment