மேகம் சிந்த
காற்று அடித்து
ஒரு
மழை நீர் ஆட்டம்...
இலைவழி வடியும்
மழை நீர் குளித்து
செடிகள் ஜொலிக்கும்...
மூங்கிலில் வழுக்கி
மழைநீர் சறுக்கும்...
மலர்களின் முதுகில்
வண்டுகள் அமர்ந்து
ஈரம் துடைக்கும்...
புல்வெளி எங்கும்
மழைநீர் பூக்கும்...
ஜடைகள் அவிழ்த்து
மழைநீர் அசைய
மழைநீர் தெரித்து
பூமி குளிரும்...
சாரல் மழையில்
மன்மதன் தவளை
இன்னிசை எழுப்பி
சுயகொலை செய்யும்...
வாத்துகள் கூட்டம்
கழுத்துகள் நீட்டி
குளத்தில் விழுந்த
புள்ளிகள் தேடும்...
குட்டி குட்டி
மீன்கள் எல்லாம்
நேராய் நின்று
மழைநீர் பருகும்...
எத்தனை ரம்யம்
சின்ன சின்ன
முத்துகள் வீசி
மேகமும் காற்றும்
ஆடிப்பாக்கிற
மழைநீர் ஆட்டம்...
எட்டிப் பிடிக்கிற
உயரத்தில் இருந்தால்
மேகமே உன்னை
கட்டிபிடித்து
முத்தம் தருவேன்...!!
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment