நீ
அஸ்திவாரம்
நீ தான் ஜனனம்
இல்லாது போனால்
ஏது
ஜனம்...
சுமைதாங்கியே
நீயும் இலைப்பாறு
பாரமாய் சுமந்து
சோர்ந்துபோக
உனக்கு மட்டும்
குத்தகையா என்ன?
எழுந்து நட
மேலே உயரமாய் நட
வழுக்கிற பாதங்களில்
பசைகள் தடவி...
அழகு மட்டும்
பெறுமையல்ல
ஆளக்கற்று பார்
நீயும்...
அதிகார நாற்காலிகளில்
உட்கார...உட்கார...
வளர்ந்து கொண்டே
போ...
அழகுக்கு மட்டும்
பெண் என்ன
காட்சிப்பொருளா?
கடவுளை கேட்டுப்பார்
உன்
படைப்பின் ரகசியம்
காதில் ஓதப்படும்...
காத தூரம்
ஓடிப்போகும்
விடிக்காளன்கள்...
கவலைஎன்பதை
விற்றுவிடு
நாளுக்குநாள்
உனக்கு மட்டும்
திருவிழா...
நீ இல்லாது போனால்
நில்லாது உலகு
மானிடம் முழுதும்
மலரட்டும் உன்னால்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
very nice..sir
ReplyDelete