Monday 10 December 2012

உறவுகள்...

குடும்பம்
இனிமையானது
உறவுகள் தேவையானது
இந்த பிறப்பு
உனக்கு
சகோதரன்,சகோதரி
தாய் தகப்பன்
அனைத்தும் தாங்கி
 உன்னை தனியாய் விடாமல்
உனக்காய் அழுதும்
சிரித்தும் சுமந்தும்
நெருக்கி
அனைத்துக்கொள்ளும்
ஒரு சங்கிலி
யார் கட்டுவார் இனி...

நீ
மரித்துபோனால்
மீண்டும் காண்பாயோ!
இருக்கிறபோது
உபயோகித்துப்பார்...

உன் தம்பியை அதட்டு
தவறு செய்கிற காலகளை
பிரம்பால் தட்டு...

அன்பு செய்
சகோதரியோடு- பொய்யாய்
சண்டையிடு
சமாதானம் செய்துபார்...
அலாதி சுகம்...

அம்மாவின் கைகளில்
படுத்துகிட
அப்பாவின் தோளை
உன் தலைக்கு கொடு...

ஆஹா உறவுகள்
பாலம் என்றால்
உண்மை தானே...

மரணம் சந்தித்தால்
அடுத்து பிறக்கும்
ஆத்மா இத்தனை
சொந்தங்களை
நினைத்துப்பார்க்குமா?

அறிவே யோசி...
இருக்கிற உறவுகளில்
உண்மையாய்
நேசிப்பை பார்...
நேசித்துப்பார்...

பிரம்மச்சாரியாய் இருப்பது
உனக்கு மட்டும்தான் சுகம்
சம்சாரியாய் இருப்பது
உனக்கு மட்டுமல்ல
இருக்கிற உன்
உறவுகளுக்கும் சுகம்...

எதில்
பிரியப்படுகிறாய் மணமே
ஒருமையல்ல
பன்மைதான் பலம்...

ஒருமையல்ல
பன்மைதான்
ஆணந்தம்...

குடும்பமே குதூகலம்...

சண்டையிடாதே
பொய்யாய் இருந்தால்
சுகம்...

இதில் மட்டும்
உண்மை வேண்டாம்
நான்
உறவுகளோடு  இடும்
சண்டையைச்சொன்னேன்
சரிதானே...???!!!

என்றும் அன்புடன் 
கலைச்செல்வன்






2 comments:

  1. உறவுகளுக்கு
    உன்னதமான கவிதை....
    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  2. நன்றி தோழர் நடராசஸ்ரீதரன்

    ReplyDelete