சாம்பலாய் போகும்தேகம்
அணலில்வெடித்து
சிதறும் நரம்புகள்
எழுந்து அடங்கும்
எலும்புகள்
வெந்துமடியும்
மண்ணோடு மண்ணாய்...
கூடுவிட்டு
ஓடிப்போகும் – உன்
ஓடுகள் மட்டும் – மண்டை
ஓடுகள் மட்டும்
நினைவுச்சின்னமாய்...
அழியப்போகிற தேகமே
ஆணவம் – பெருமை
கர்வம் – அகம்பாவம்
எல்லாம் எங்கே
தேடிப்பார்...
பிறக்கிற போதே
சுமந்து வந்தாயா – அல்ல
உன் தாய் தந்தை
தைத்துப்போட்ட உன்னை
நிமிர்ந்து நிறுத்திய
ஆத்மாவை திரும்பி பார்...
ஓடிப்போகும் – இது
ஓடிப்போகும்...
இருக்கிறபோதே
ஒளியை உனக்குள் வரவிடு
காரிருள்
புகாதபடி திறந்துவை
வெளிச்சம் வரட்டும்
காண்கிற
கண்கள் கூசட்டும்...
இருட்டில் இருப்பது
சைத்தானுக்கு மட்டும்
பிரியம்...
சைத்தான் என்ன
நீட்டிய நாக்கும்
கூறிய நகமும்
விரிந்த மயிறும்
பெருத்த வயிறும் கொண்ட
பயங்கரமா...?
இல்லை
ஆணவமும் பெருமையும்
அகம்பாவமும்
மறுபெயர் தாங்கி
இங்கு சைத்தானாய்
விட்டு அறு
விரட்டு ... ஓடட்டும்...
ஒளியை தேடு
திறந்து வை...
இதயக்கதவுகளை
அகலமாய்..
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment