Sunday 6 November 2011

திரு நங்கை...

படைத்தவனே
ஏன்
உன் படைப்பில் 
இத்தனை ஓரவஞ்சனை...


எல்லாம் 
அறியும் நீ...


ஆண்பெண்
என்று மட்டும் நிறுத்தாமல்
திருநங்கைகளை உண்டாக்கி
அனலில் இட்டாய்...


உணர்வுகளை 
மறைத்து .... உருவங்களை 
திருத்தி - பாவம்
இப்படி ஒரு பிறவியை
எதற்கு
எழுதித் தொலைத்தாய்....


காண்கிற போதே
ரணமாகிறது
கண்கள்...


சமூகம் அவர்களை
சாட்டையால் 
அடித்து
சந்தியில் நிறுத்தி
சிரித்தும் பார்க்கிறது...


ஓரமாய்
ஒதுக்கி - ஊருக்கு
வெளியே 
விரட்டி விட்டாலும்
திருநங்கைகள் எல்லாம்
ஒன்றாய் கூடி -கைதட்டி
உனக்கு 
அச்சதையல்லவா
போட்டுப் பார்க்கிறார்கள்...


உருவம் 
மட்டும் மாறியதல்ல 
உள்ளமும் உள்ளே
வெந்த தளும்புகளை
வெளியே மறைக்க
கைதட்டி பாடும்
திருநங்கைகள் எல்லாம்
அனைத்துக்கொள்வோம்!


ஆறுதலான
கரங்கள் நீட்டி
அருகில்
அவர்களை அமர்த்தி
சரியாய் உரிமையை
பகிர்ந்து கொடுப்போம்


ஆண், பெண் ,திருநங்கை
சாதி மூன்று -என
சத்தமாய் சொல்லி
திருநங்கைகள் காதில்
தேன் ஊற்றி
பார்போம்...

No comments:

Post a Comment