Tuesday 22 November 2011

கண்ணதாசன் ஒரு சகாப்த்தம்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இசையின் வலிமை என்னவென்று அந்த இறைவனுக்கும் தெரியும் என்பார்! இசைக்கு மயங்காதோர் இங்கே யார்?

ஆங்கிலக் கதையொன்றின் தழுவலாய் டால்ஸ்டாய் கதையின் தமிழாக்கம்.. கல்லூரி ஒன்றில் நடக்கும் நாடகமாக.. தமிழ்த்திரையுலகில் தவப்புதல்வன் என்கிற திரைப்படத்தில்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நிதர்சனமான நடிப்பில்.. உணர்ச்சிமிகு காட்சியமைப்பில் ., தீபங்களைத் தன் பாட்டு வரிகளால் ஒளிதர வைத்திடும் வண்ணம்.. இசை அமைக்கப்பட வேண்டும்.. வரிகள் உருப்பெற வேண்டும். பிறகென்ன.. முக்தா சீனிவாசன் தயாரிப்பில்.. உருவான தவப்புதல்வனுக்காக .. தமிழ்த்திரையின் தவப்புதல்வர்கள் கண்ணதாசனும் விஸ்வநாதனும் கூட்டணி சேர்கிறார்கள்.

இசையும் கவிதையும் பொருளை உணர்ந்து நடமாடுகின்றன பாருங்கள்! அமுதத்தமிழை அள்ளி வழங்க கண்ணதாசனும்.. இனிய இசையை மெருகேற்றித்தர எங்கள் விஸ்வநாதனும்.. இவர்தம் உழைப்பை உள்வாங்கி.. தன் குரலால்.. பாவங்களைக் காட்டி.. உயிரோட்டம் தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் - தமிழ்த்திரை வரலாற்றில் பொன்னேடு!!

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் (இசை)
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்

விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

திரைப்படம்: தவப்புதல்வன்

No comments:

Post a Comment