Monday 7 November 2011

ஏங்குகிறாள் ஒரு ஏந்தழை...


தவழ்ந்திடும் தென்றலை
தவமிருந்து கேட்கிறேன்
தர ஏனோ மறுக்கிறாய்
இறைவா....?

மழலை ஒன்றை
மார்பேந்திட
நெஞ்சம் ஏங்கி தவித்திட
வஞ்சம் ஏனோ செய்கிறாய்
இறைவா...?

கல்லறை ஆக்கிவிட்டாய் - என்
வாழ்வுதனை
கண்ணீராய் ஏனோ மாற்றிவிட்டாய்
கருப்பையில் ஏனோ ஈரமில்லை
இறைவா...?

மலடி என்ற
மாறா பட்டம் மறையாதோ
மழலை ஒன்றை - நான்
மடியேந்த மனம்
மாறமாட்டாயோ....?

குருடியாய் இருந்தாலும்
குழந்தையில்லை எனில்
குருடி என்று
யார் அழைப்பார்
அழைப்பதெல்லாம்
மலடிதானே...

கருங்களாய் இருந்தாலும் நீ
கற்பகிரகத்தினுள்ளே தான்
இருக்கிறாய் - பின்
இருளை தந்து எனக்கு மட்டும்
வஞ்சனை ஏனோ செய்துவிட்டாய்...

இறைவா
உனக்கு கருணை வருமோ- என்
கருவறை நிறைந்திடுமோ
கரும்புள்ளி நீங்கிடுமா...?

No comments:

Post a Comment