Friday 4 November 2011

வான் பறவைகள் ......

                  
பறவைகளும் நாங்கலும் 
ஒரே சாதி...
 பரதேசம் பறப்போம்
ஆகாயத்தில் அன்றாடம்


ஆர்வம் உறுத்தியதால்
ஆகாயம் தொட்டு
உயர பறந்தோம்
சிறகுகளின்றி...

சிக்கன சிரிப்புகள்
சில்லறைகளாய்...

வருபவர்களை
வரவேற்பதே எங்கள்
வாடிக்கை
வாழ்க்கையில் 
நகைப்பதே மறந்தோம்
நிஜ வேடிக்கை...

வேடர்களின் பார்வை
வித்யாசம் ஏராளம்
விழிகள் விழுங்கும் 
வீழ்ந்தால் நிச்சயம்...

காணும் கண்களுக்கு 
தாயும் நாங்கள்
தாதியும் நாங்கள்

முள்ளில் மேடைகள்
பாதங்கள் பழகின
பறந்தே ஆடினோம்
நளினமாய்
 நாட்டியம் ஆடும் 
நர்த்தகிகள் நாங்கள்...

உற்றார் போல
உவந்து உபசரிபோம்

மது கேட்க்கும் மனங்களுக்கு
கோப்பையில் திரவம் 
கொஞ்சும் புன்னகையில்

சிறுமூளை சட்டென 
சிலிர்க்கும்
மதுகுப்பியை
மாதுக்கள் நாங்கள்
கொடுத்ததால்...

வானத்தில் வாழும் 
வான்மதி நாங்கள்
வான வாசலில் 
நீச்சலடிபோம்
நிலவைபோல
விண்மீனை விடுத்து
வீரத்தோடு நாங்கள்...
வின்னிலிருந்து
மண்ணில் வருவது
மறுஜென்மம் தான்...
அன்றாடம் நாங்கள் 
கர்ணம் போடுகிறோம்
உணர்வுகளை மறந்து..

வான ஊர்தியில் வாழ்க்கை
ஊர்வலம் வந்தோருக்கு
வாழ்துக்கள் கூறி...













No comments:

Post a Comment