Friday 25 November 2011

வெட்க்கம் கெட்ட கனவுகள்....


ஊர் உறங்கும்
நேரத்திலும் உன்
நினைவுகள் மட்டும்
விழித்திருக்கும்....உன்
வழி பார்த்திருக்கும்...

வென்மேகம் காத்திருக்க
வெள்ளைப்பணி பூத்திருக்க
நற்றாழம்பூ
வாசம் வீச
வந்து நிற்பாய் - என்
வாசலடி...

வானதி கூச்சலிட
வின்மீன் நீச்சலடித்து
விலாசம் கேட்க்கிறதே
நீ வந்த பாதை தேடி...

கிணற்று தவளை எனக்கு
உறவுக்காரி நீதானே!

அல்லிக்கும் அந்தி
மல்லிக்கும்
அடங்காத புன்னகை - உன்
கருங்கூந்தல் ஏற

நீ என்ன நர்த்தகியா
நளினமாய்
நாட்டியமாடுகிறாய் - என்
மனசுக்குள் நெடுநாளாய்...

வேஷக்கார உறவு
வெட்க்கம் கெட்ட கனவு
என்னுள் எப்படி...??????
எல்லாம் கண்ணே
உன்னை நினைத்து
உளறிய வார்த்தைகள்
உறக்கத்தில் கனா...

நடு இரவில்
நீ தரும் சுகம்
அப்பப்பா...
சொன்னால் புரியாதடி
பெண்ணே...

இரவு நேர பூக்களெல்லாம்
எங்கிருந்தோ உன்
மனம் வீசுகிறதே...

என்னுள் இருக்கைஇட்டு
இரு கை அனைக்க
இதயம் தவிக்க
இரவெல்லாம் உன்னோடு
வெட்ககம் கெட்ட கனவு...

மனதை வருடும்
வசந்தமே நீ
வந்தால் நான்
சுகமே...

உன்
நினைவெல்லாம்
நிலைத்திருக்கும்
என் வசமே...

மதி கெட்டவன்
நானாம்
மரித்து போகிற
மானிடம்
பிதற்றிக்கொள்கிறது...

முழுமதியே - என்னுள்
முழுதாய் நீ இருக்க
நானெப்படி கெடுவேன்...

தூரத்தில் இருக்கும் உன்னை
முத்தமிட ஆசையடி...
உள்ளுக்குள் பயம்
ஊருக்குள் கலவரம்
வந்திடுமோ...??????????

மேல்சாதி பெண்ணே
கீழ்சாதி என்னை
மணப்பாயோ...??
இல்லை
மறுப்பாயோ...??

No comments:

Post a Comment