Tuesday 25 September 2012

குற்றம்


உலகத்தை எழுதிவச்சேன்
உன்பெருமை எடுத்துவச்சேன்
உன் பேர ஊரெல்லாம்
பெருமையா பேசனும்னு
என் பேர மாத்திகிட்டேன்
உன் பேரவச்சி...

என் பேர மறந்துட்டீயே...!!

அம்மானு சொன்னாக்க
அழுதழுது கண்ணம்
சிவக்கும்
மகன்னு சொல்ல
மனசு இன்னும் வரலயே

ஒரு வேளை
கருவுல நீ கலச்சப்ப
ஏமாத்தி வந்த்தாலா
தினந்தினம்
தற்கொலையோ...

என் நெலம இப்படி...???

கலைச்செல்வன்
 —

No comments:

Post a Comment