Tuesday 25 September 2012

அந்த நாள்... அவளோடு...

நீ தந்த முத்தம் 
நித்தம் தவிக்கும்
நினைவுக்குள் இன்றும்...

அந்த நாள்
அந்தி நேரம்
மழைபூமியோடும்
மாந்தோப்புக்குள் – நீ
என்னோடும்...

சல்லடையாய் சுடிதார்
சங்கடமாய் மனசு
கொடுத்துவைத்தது மழை

நள்ளிரவும் பேசும்
நடுவானில் நிலா
கடல்தாண்டி நான்
கனவுகள் மட்டும்
இன்றும் என்னோடு...

புரியாத கலவரம்
பூரிக்கும் இதயம்
பார்க்காத நாட்க்கள்
பேசாத நிமிடங்கள்...

நீ வைத்த மருதாணி
இன்னும் மணக்கும்
மனசுக்குள் மௌனமாய்...

நீயோ
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் ...
நானோ ...????!!!

கலைச்செல்வன்.

No comments:

Post a Comment