Wednesday 5 September 2012

ராமலான்...





அளவற்ற அருளாளனும்

நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹுவின் திருப்பெயரால்

இறைமறை வந்தநாள்

இன்னல்கள் தொலையும் திருநாள்

வான்வழி திருவிழா

வள்ளல் நபி பெருவிழா

மூத்தோரின் வேதம்

முஹமது நபிகள் 

மூலம் வந்த புனிதம்

சொந்தமிகு இஸ்லாம்...

உண்ணாதிருப்பதும்

பருகாதிருப்பதும் - அவன்

உன்னதங்களில் சேரும்...

மாண்புடையமாதம்

மாநபிகள் மூலம்

மறைநூல் வந்த மாதம்

சங்கை மாதம் - எங்களின்

சிறப்பு மாதம்...

ஈத் பெருநாள்

இன்பத்திருநாள்

இஸ்லாத்தின் நன்நாள்..

சைத்தானிடமிருந்தும்

சத்ருக்களிடமிருந்தும்

காக்கவல்ல கருணை மாதம்-நம்

ரமலான் மாதம்...
தரணிவாழ இறைவன்

தந்த நபிகள்

சொன்ன வழி நடப்போம்

சொர்க்கம் செல்லும்வரை அவர்

சொன்ன சொல்லைக் காப்போம்

உருவமற்ற ஒளிவடிவ

உண்மையான இறைவனை

நாளெல்லாம் தொழுவோம்

குறையேதுமில்லாது

உயிர்வாழ்வோம்...      


ஒரு மாதம் நோன்பிருந்தோம்

ஓராண்டு பலன் பெருவோம்

ஓதும் மறைபொருளை

ஓயாது தொழுதிடுவோம்...

ஔவையங்கள் நீங்கிட

அல்லாஹூ தந்த

அற்புத ரமலானில்

அவன் வழியில் செல்வோம்...

No comments:

Post a Comment