Friday 14 September 2012

காதல் செய்யாதே


காதல்
செய்யாதே
காலம்
செயலிழக்கும்...

பூவின் மனம்
புன்னகை இழக்கும்
பூவையர் இனம் – சதி
வலைக்குள் இழுக்கும்

அது
தேகம் தேடும்
காதல் சுகம்..

பணம் செய்
பரத்தையும் வருவாள்
பிடிக்காத மலர் கூட
மணம் வீசும்- உன்
அந்தபுரத்தில்...

காதல்
புதுயுகத்தின்
ஹிட்லர்...புது
கில்லர்
சாட்சியே இல்லா
தீவிரவாதி

அன்புசெய்
அனைவரிடத்தும்
ஆறுதல் தரும்
ஆணந்தம் வரும்...



பொருள் செய்
புகழ் உன்னைத்தேடும்
புகழைநீ தேடாதே

காலங்கள் மாறும்
காத்திரு
கடமையை செய்

உன்
காலடியில் கிடக்கும்
நாளைய உலகம்
நம்பிக்கை பிறக்கும்
நல்வாழ்வு கிடைக்கும்

நன்றியுடன் நட
நாளை
நாடாளும் நாயகந்தான்
நீயும்...

No comments:

Post a Comment