Friday 14 September 2012

அழகு...



அறியாத உன்னை
அடையாளங்கொண்டேன்
அன்று
அழகான நாள் அது

மெலிந்த தேகம்
கலைந்தகேசம்
கபடமில்லா மனசு
கடனில்லா சிரிப்பு

சற்றே
தள்ளாட்டம் என் மன்சில்
தாங்காத கொண்டாட்டம்

சித்திரமாய்
என் மனசுக்குள் நீ

சின்ன பொய்கள்
சிமிட்டாத விழிகள்
அப்பப்போ - போதும்
பெண்ணே – உன்னை
எழுதும்போதே
கூடிபோகிறது
காகிதத்தில் அழகு
பேனா முனைகளில்
கசிகிறது
காதல் திரவம்
காகிதகுப்பியில்...

No comments:

Post a Comment