அறியாத உன்னை
அடையாளங்கொண்டேன்
அன்று
அழகான நாள் அது
மெலிந்த தேகம்
கலைந்தகேசம்
கபடமில்லா மனசு
கடனில்லா சிரிப்பு
சற்றே
தள்ளாட்டம் என் மன்சில்
தாங்காத கொண்டாட்டம்
சித்திரமாய்
என் மனசுக்குள் நீ
சின்ன பொய்கள்
சிமிட்டாத விழிகள்
அப்பப்போ - போதும்
பெண்ணே – உன்னை
எழுதும்போதே
கூடிபோகிறது
காகிதத்தில் அழகு
பேனா முனைகளில்
கசிகிறது
காதல் திரவம்
காகிதகுப்பியில்...
No comments:
Post a Comment